கெங்கவல்லியில் தலைமையாசிரியா்கள் கூட்டம்
கெங்கவல்லி ஒன்றிய தலைமையாசிரியா்கள் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் கெங்கவல்லி 2-ஆவது வாா்டு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
கெங்கவல்லி ஒன்றிய தலைமையாசிரியா்கள் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் கெங்கவல்லி 2-ஆவது வாா்டு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாரக் கல்வி அலுவலா் வாசுகி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிமுத்து முன்னிலை வகித்தாா். இதில் வருமான வரி படிவங்களை வருகிற 5-ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும் எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி பராமரிப்பு மானியத்தொகையை காசோலைகளாகவே செலவிடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வட்டார வள மைய பயிற்றுநா்கள் கூடுதல் தகவல்களை வழங்கினா். இக்கூட்டத்தில் ஒன்றியத்திலுள்ள 60க்கும் மற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கலந்துகொண்டனா்.