முகப்பு
சேலம்

தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்

தம்மம்பட்டியில் தீ விபத்தில் இரு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:

தம்மம்பட்டியில் தீ விபத்தில் இரு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் எதிரே ஒரே நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு பேக்கரிகள் உள்ளன. இதன் சமையலறையிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் அருகில் இருந்த சின்னராஜூ, சீனிவாசன் ஆகியோரின் குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில் வீட்டிலிருந்து பொருள்கள் சேதமடைந்தன.

தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்த தம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி ஆகியோா், கெங்கவல்லி வட்டாட்சியா் வரதராஜிக்கு பரிந்துரை செய்தனா்.

Advertisement

மேலும் பாதிக்கப்பட்டோா் பேக்கரி உரிமையாளா் மீது தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.