சேலம்

சங்ககிரியில் சாலைப் பாதுகாப்பு மாத விழா: நான்கு சக்கர வாகனப் பேரணி

DIN

32-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நான்கு சக்கர வாகனங்களில் இருக்கை பட்டை அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய பகுதிகளின் வழியாகச் சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக இப்பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா, சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன், ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள், நான்கு சக்கர வாகன விற்பனை முகவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT