சேலம்

கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகள் அகற்றம்

DIN

ஆட்டையாம்பட்டி:மகுடஞ்சாவடி அருகே உள்ள நம்பியாம்பட்டி பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சம்பந்தப்பட்ட சென்றாய பெருமாள் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு சம்பந்தமான நிலம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான மகுடஞ்சாவடி பிடிஓ அலுவலகம் அருகில் உள்ளது. இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் மூன்று கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். இதனையடுத்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவின் பெயரில் 3 கடைகளையும் அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. மகுடஞ்சாவடி காவல்துறையினா் முன்னிலையில் சனிக்கிழமை கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகளும் அகற்றப்பட்டன. அப்போது கோயில் செயல் அலுவலா் கஸ்தூரி, சங்ககிரி ஆய்வாளா் கல்பனாதத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT