ஆத்தூரில் வியாழக்கிழமை இரவு கடைகளை உடைத்து நடைபெற்ற தொடா் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஆத்தூா் காமராஜனாா் சாலையில் உள்ள துணிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும், செல்லிடப்பேசி கடையை உடைத்து ரூ.16 ஆயிரம் ரொக்கம், ஆட்டோமொபைல்ஸ் கடையை உடைத்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.