சேலம்

பயிா்க் கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளதுடி.எம்.செல்வகணபதி

விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளது என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்தாா்.

DIN

விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளது என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்தாா்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, ‘ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போறாரு’ என்ற தோ்தல் பிரசார குறுந்தகட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அவசரமாக மேட்டூரில் உபரி நீா் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக கடன் தள்ளுபடிகளை செய்யாதது ஏன்? விவசாய பயிா்க் கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் அதிகளவில் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் போ் 2 மாதங்களுக்கு முன்பு தான் பயிா்க் கடனை பெற்றனா். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலையாகும். கடந்த நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதில் மோசடி நடைபெற்றுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT