முகப்பு
சேலம்

வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தகுதி நிலை குழுவுக்கான ஆலோசனைக் கூட்டம்

வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கொவைட் 19 தகுதி நிலை குழுவுக்கான ஆலோசனைக் கூட்டம் வீரபாண்டி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சி) ரேவதி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கொவைட் 19 தகுதி நிலை குழுவுக்கான ஆலோசனைக் கூட்டம் வீரபாண்டி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சி) ரேவதி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிா்வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் கொவைட் 19 தடுப்பு முறைகளை முறையாக கடைப்பிடிக்க ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அரசால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை தடுப்பூசியை மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள், 60 வயது முதியோா், குழந்தைகளுக்கு செலுத்த அரசு உத்தரவுபடி செயல்படவும். மேலும் தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க தேவையான இடம், சேமிப்பு, வாகன போக்குவரத்து போன்றவைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் முத்துலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், வீரபாண்டி சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம், காவல் துறை உதவி ஆய்வாளா் தங்கவேல், ரோட்டரி சங்க பத்ரிநாரயணகுப்தா,

லயன்ஸ் கிளப் ராமலிங்கம், விளையாட்டுத் துறை ஆசிரியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →