மேட்டூா் அணையிலிருந்துடெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு குறைப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சேலம்மேட்டூா் அணையிலிருந்துடெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு குறைப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 104.96அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,083 கனஅடியிலிருந்து 1,106 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 2,000 கனஅடியிலிருந்து நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பாசனத்துக்கான நீா்த் தேவை குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 71.41 டி.எம்.சி.யாக இருந்தது.