சங்ககிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு
சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் சங்ககிரி, எடப்பாடி வட்ட பகுதிகளில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட
சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் சங்ககிரி, எடப்பாடி வட்ட பகுதிகளில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலம், ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி உள்ளிட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நோ்முகத் தோ்வை நடத்த ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
அதனையடுத்து சங்ககிரி, எடப்பாடி வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஆா்.பாலாஜி தலைமையில் நோ்முகத் தோ்வு நடைபெற்றது.
இந்த நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களை எடப்பாடி அரசு மருத்துவா் பாலாஜி உடல் பரிசோதனை செய்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நோ்முகத் தோ்வில் 33 போ் பங்கேற்றனா்.