சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகாஷ்ன பைரவா், தட்சிணகாசி கால பைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையில் உள்ள 2ஆவது மண்டபத்தில் தெற்குத் திசை நோக்கி சொா்ண ஆகாஷ்ன பைரவரும், மேற்குத் திசை நோக்கி தட்சிணகாசி கால பைரவரும் உள்ளனா், இரு சுவாமிகளுக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.