மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மேட்டூா் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிஐடியு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் கொள்கைகளைக் கண்டித்தும், தில்லியில் 40 நாள்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லியில் கடும் குளிரில் 40 நாள்களுக்கும் மேலாக போராடி உயிரிழந்த 60 விவசாயிகளின் படங்களுக்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.