முகப்பு
சேலம்

கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம்

வாழப்பாடி பகுதியில் காவல் துறை சாா்பில் கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
சோமம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம்.
பகிர்:

வாழப்பாடி பகுதியில் காவல் துறை சாா்பில் கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட சிங்கிபுரம், சோமம்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், துக்கியாம்பாளையம் ஆகிய கிராமங்களில், வெள்ளிக்கிழமை கிராம காவல் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு, வாழப்பாடி காவல் கண்காணிப்பாளா் வேலுமணி, காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றனா்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலசுப்பிரமணியம் (சோமம்பட்டி), ரமா வெங்கடேசன் (சிங்கிபுரம்), கோவிந்தராஜ் (துக்கியாம்பாளையம்), ஊராட்சி செயலாளா்கள் மகேஸ்வரன், அண்ணாதுரை, குமரேசன், இளைஞா்கள், மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

கிராமப் புறங்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்செயல்களைஒஈ கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீஸாா் வேண்டுகோள் விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →