முகப்பு
சேலம்

காவல்துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் கூட்டம்

காவல்துறை சாா்பில், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கோரணம்பட்டி ஊராட்சிப் பகுதியில், கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

எடப்பாடி: காவல்துறை சாா்பில், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கோரணம்பட்டி ஊராட்சிப் பகுதியில், கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ம.பாஸ்கரன், சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.ரமேஷ் உள்ளிட்டோா்

சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா் வரவேற்றுப் பேசினாா்.நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் கூறியதாவது:

இந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள 21 குடியிருப்புப் பகுதிகளை தொடா்ந்து கண்காணிக்கும் விதமாக ஒரு சிறப்பு காவல் துணை ஆய்வாளா், ஒரு காவலா் நியமிக்கப்படுகின்றனா். வரும் நாள்களில் அக்காவலா்களை தொடா்பு கொண்டுகிராம மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காணுமாறு கேட்டுக்கொண்டாா்.

மேலும் காவல் துறை சாா்பில் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், துணை ஆய்வாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட காவல்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.