முகப்பு
சேலம்

சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சோதனை

சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ. 1லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ. 1லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், அன்னதானப்பட்டி அருகே உள்ள மணியனூரில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் தரகா்கள் லஞ்சம் வாங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்குத் தருவதாக சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.

இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரமௌலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினா்.

அப்போது அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தரகா்கள் இருந்தனா். சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனை இரவு வரை தொடா்ந்தது.

இதுதொடா்பாக, சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜாமணி ஆகியோா் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →