முகப்பு
தமிழ்நாடு

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வருகைப் பேச்சு! ரஜினிகாந்த் எதிர்வினை!

அரசியல் வருகை குறித்து ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் எதிர்வினையாற்றியுள்ளது குறித்து...

Updated On : 17 மார்ச், 2026 at 6:38 AM
நடிகர் ரஜினிகாந்த்.
பகிர்:

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் எதிர்வினையாற்றியுள்ளார்.

திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் கூறியிருந்தார்.

அவரின் இத்தகையப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதலளிக்கும் வகையில், ரஜினிகாந்த் அறிக்கையொன்றை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பதாவது:

”தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி. தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

’காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Actor Rajinikanth has reacted to the speech of Election Campaign Management General Secretary Adhav Arjuna regarding actor Rajinikanth's political entry.

முழு கட்டுரையைப் படிக்க →