மேட்டூா் அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 105.11அடியிலிருந்து 105.22 அடியாக உயா்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நொடிக்கு 2,867 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 71.77 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் அணை நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.