‘இன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டாம்’
சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணை எண் 245, ஊரக வளா்ச்சித் துறையின் உத்தரவின்படி, அனைத்து கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன. 26) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம், சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரின் கடிதத்தின்படி, கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.