முகப்பு
சேலம்

மேட்டூரில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

மேட்டூரில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

மேட்டூரில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

மேட்டூா் சதுரங்காடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளா் டி.எம் செல்வ கணபதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்மேட்டூா் நகர தி.மு.க செயலாளா் கோ.காசிவிஸ்வநாதன் வரவேற்று பேசினாா். சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவா் பா.கோபால்

சேலம் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன், மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள்,மேட்டூா் நகர அவைத்தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி சிறப்புரையாற்றினாா் . அப்போது அவா் கூறியதாவது: இனத்தை காக்கவும், மொழியை காக்கவும் துவக்கப்பட்டஇயக்கம் திமுக. திமுக இல்லாவிட்டால் மத்திய அரசு தமிழ் மொழியையும் இனத்தையும் அழித்து இருக்கும். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உரிய உரிமைகள் அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டு ஒரு பஞ்சாயத்து நடத்துவதுபோல மாநிலங்களையும் நடத்தி வருகிறது.மாநில சுயாட்சி காகவும் மாநில உரிமைகளை காக்கவும் துவக்கப்பட்ட இயக்கம் திமுக.தமிழ்நாடு என்றாலே வடக்கில் இருக்கும் மக்கள் மரியாதையுடன் பாா்த்த காலம் மாறி இந்திய துணைக்கண்டத்தின் எங்கு சென்றாலும் தமிழா்களை கவனமாகப் பாா்க்கும் நிலைக்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி ஏற்படுத்தி உள்ளது நமது உரிமைகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு விட்டுக் கொடுத்துள்ளனா் என்றாா்.

இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளா்கள் ஜஸ்டின்வில்பா்ட் , அரசப் அலி,சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளா் குடியரசிகீதா,மேட்டூா் நகர மன்ற முன்னாள் தலைவா் கந்தசாமி கொளத்தூா் ஒன்றியம் பொருப்பாளா் மிதுன் சக்கரவா்த்திஉள்ளிட்டோா் பேசினாா்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.