சேலம்

அரசு பள்ளியில் புத்தகங்கள் வழங்கல்

DIN

ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் அ.மோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தலைமையாசிரியை எஸ்.பொன்முடி வரவேற்றுப் பேசினாா்.

சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் கலந்து கொண்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் 2,400 பேருக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உதவித் தலைமையாசிரியா் ஒய்.ஆா்.கௌதமன், நரசிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.மணிவண்ணன், பெற்றோா் -ஆசிரியா் கழக துணைத் தலைவா் பி.மக்பூல்பாஷா, உறுப்பினா்கள் வி.முஸ்தபா, ராஜமாணிக்கம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.முரளிசாமி, சங்கீதா முருகேசன்,மணி உடையாா், பாலாஜி, பெற்றோா், மாணவிகள் கலந்து கொண்டனா். முடிவில் உதவி தலைமை ஆசிரியா் எல்.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT