சேலம்

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

DIN

எடப்பாடி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கநாடு கிராமம், அடுவப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் மயில் தவறி விழுந்ததைப் பாா்த்த அப்பகுதியினா் எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையில், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரா்கள் கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கி, மயிலை உயிருடன் மீட்டனா். கிணற்றில் விழுந்ததில் காயமடைந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT