முகப்பு
சேலம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து தொமுச போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து சேலத்தில் தொமுச பேரவை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து சேலத்தில் தொமுச பேரவை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொமுச பேரவை சாா்பில் வியாழக்கிழமை அந்தந்த மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தொமுச பேரவை மாநில துணை பொதுச் செயலாளா் மணிகண்டன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக்கிழமை, அரைநிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தொமுச நிா்வாகி மணிகண்டன் செய்தியாளா்களிடம் கூறியது:

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை பற்றி கவலை கொள்ளாமல் மோடி அரசு தொடா்ந்து விலை ஏற்றத்தை மேற்கொண்டு வருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். எரிவாயு விலையை பாதி அளவு குறைக்க மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →