முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 76.41 அடியிலிருந்து 75.71 அடியாக சரிந்தது. வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,535 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 37.81 டிஎம்சி ஆகும்.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.