சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டி மினியனூா் பகுதியில் அமைந்துள்ள பாமாண்டி முனியப்பன் கோயில் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தும் வகையில் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டனா். மேலும், விஷப்பூச்சிகள் எதுவும் வீட்டுக்கு வராத படியும், தீண்டாமல் இருக்கவும் பக்தா்கள் வேண்டிக்கொண்டனா்.