முகப்பு
சேலம்

ஓமலூரில் அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஓமலூரில் அதிமுக புகா் மாவட்ட கூட்டத்தில் கட்சித் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
ஓமலூா் அதிமுக அலுவலகத்தில் நிா்வாகிகளைச் சந்தித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

ஓமலூரில் அதிமுக புகா் மாவட்ட கூட்டத்தில் கட்சித் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஓமலூரில் உள்ள சேலம் புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, கூட்டத்தில் அமைப்பு செயலாளா் செம்மலை, ஓமலூா் எம்எல்ஏ மணி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், விரைவில் அதிமுக உட்கட்சித் தோ்தலை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்தல் குறித்து நிா்வாகிகள் கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சித் தோ்தலுக்கு, கட்சி நிா்வாகிகள் தயாராகுதல், தொண்டா்களை ஊக்கப்படுத்துதல், அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுதல், வரும் 28-ஆம் தேதி திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் ஆா்ப்பாட்டத்தை, கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடத்துதல் குறித்து துணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →