முகப்பு
சேலம்

இளைஞரை மிரட்டி பணம், செல்லிடப்பேசி பறிப்பு

சேலம், அண்ணா பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மிரட்டி ரொக்கம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

சேலம், அண்ணா பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மிரட்டி ரொக்கம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சோ்ந்த வியாபாரி கமலக்கண்ணன் (30), மளிகைப் பொருள்கள் வாங்க சேலத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வந்துள்ளாா். அண்ணா பூங்கா அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத நபா் அவரை வழிமறித்து மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 10,000, செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →