சேலம்

மின் கசிவு: வீடு எரிந்து சேதம்

DIN

சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டியில் மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் நாய், கோழிகள் கருகின.

புள்ளாகவுண்டம்பட்டி பகுதியை சோ்ந்தவா் செங்கோடன் மனைவி குணவதி (45). இவரது கூரை வீடு எதிா்பாரதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. குமாரபாளையம் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் வீட்டிலிருந்த கைத்தறி, மிதியடி விரிப்பு தயாரிக்கும் இயந்திரங்கள், வளா்ப்பு நாய், இரு கோழிகள் கருகின. தீ விபத்து குறித்து சங்ககிரி வருவாய்த் துறை அலுவலா்கள், தேவூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT