சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தண்ணீா்தாசனூா் நான்கு சாலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள முள்புதரில் அடையாளம் தெரியாத ஆறு மாத சிசுவின் சடலத்தை தேவூா் போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
முள்புதரில் தொப்புள் கொடியுடன் ஆறு மாதம் உள்ள சிசுவின் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தேவூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி சடலமாக கிடந்த சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காவேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள் உள்பட பல்வேறு கிராமங்களில் கா்ப்பிணியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்கள் விபரங்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.