ஜமாபந்திக்கான மனுக்களை இணையவழியில் ஜூன் 23 ஆம்தேதி முதல் பொதுமக்கள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வருவதைக் கருத்தில் கொண்டு 1430 பசலி ஆண்டுக்கான (2020 - 2021) வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெறும் முறை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் ட்ற்ற்ல்ள்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதள முகவரி மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் வரும் ஜூன் 23 ஆம்தேதி முதல் ஜூலை 31ஆம்தேதி வரை பொதுமக்கள் தங்கள் மனுக்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த வசதியைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.