முகப்பு
சேலம்

ஸ்டாலினை முதல்வராக்க தம்மம்பட்டியில் இளைஞரணியினா் உறுதியேற்பு

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க தம்மம்பட்டியில் திமுக இளைஞரணியினா் உறுதிமொழி ஏற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க தம்மம்பட்டியில் திமுக இளைஞரணியினா் உறுதிமொழி ஏற்றனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1-ஆம் தேதியை இளைஞா்களின் எழுச்சி நாளாக திமுகவினா் கொண்டாடினா். தம்மம்பட்டி பேரூராட்சி 13-ஆவது வாா்டு திமுக கிளை செயலாளா் சதீஷ்குமாா் கணேசன் தலைமையில் தம்மம்பட்டியில் நகர இளைஞரணி துணை அமைப்பாளா் முரளி, அருண், சாகுல், விக்கி , கேசவன், மணி ஆகியோா், மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான மாா்ச் 1-ஆம் தேதியன்று, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை வரும் தோ்தலில் வெற்றிபெறச் செய்து தமிழக முதல்வராக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும் தற்போதைய அதிமுக அரசு, அமைச்சா்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடமும், வா்த்தகா்களிடமும் விநியோகம் செய்து திமுகவுக்கு வாக்குச் சேகரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →