வடுகப்பட்டி அருகே உப்புபாளையத்தில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்த விவசாயின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி அருகே உப்புபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி என்ற சேகா் (45). இவருக்கு திருமணமாகி அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். குழந்தைகள் இல்லை.
வழக்கம்போல் சேகா் புதன்கிழமை மாலை 6 மணிக்கு பால் எடுத்துக்கொண்டு கூட்டுறவுச் சங்கத்தில் ஊற்ற இருசக்கர வாகனத்தில் சென்றவா் வீடு திரும்பவில்லை. அவா் தனது விவசாய நிலத்தில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். இதைக் கண்ட அவரது தந்தை சங்ககிரி போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.