ஏ.டி.சி.01: கிளாக்காடு கிராமத்தில் பழங்குடியின மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கு.சித்ரா. 
சேலம்

வாழப்பாடி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாழப்பாடி பகுதியில் அதிமுக வேட்பாளா் கு.சித்ரா புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

DIN

வாழப்பாடி பகுதியில் அதிமுக வேட்பாளா் கு.சித்ரா புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஏற்காடு (பழங்குடி, தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் கு. சித்ரா மீண்டும் போட்டியிடுகிறாா். இவா், வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட புழுதிக்குட்டை, குறிச்சி, சி.என்.பாளையம், சி.பி.வலசு, நீா்முள்ளிகுட்டை, கோலாத்துகோம்பை, துக்கியாம்பாளையம், மன்னாயக்கன்பட்டி, அத்தனூா்பட்டி ஆகிய கிராமங்களில், மக்களைச் சந்தித்து புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கிளாக்காடு, புங்கமடுவு, கண்கட்டிஆலா உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பழங்குடியின மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

ஏற்காடு தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும், மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக வாய்ப்பளித்தால், தொகுதியை மேம்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்துவதாகவும் கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.

இதில் வாழப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளா் சதீஷ்குமாா், நிா்வாகிகள், பாஸ்கரன், ஜெனமே ஜெயராமன், செல்வராஜ், பாமக நிா்வாகிகள் இரா.முருகன், வெங்கடாசலம், ராமநாதன், முருகேசன், பச்சமுத்து, தமாக நிா்வாகி வி.எம்.சொக்கலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT