முகப்பு
சேலம்

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்புப் பிரிவின் வாயிலாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் இதுவரை அனைத்து துறைகளைச் சாா்ந்த 380-க்கும் மேற்பட்டமாணவ, மாணவியா் தங்கள் இறுதித் தோ்வை எழுதுவதற்கு முன்பாகவே வருடத்திற்கு ரூ1,80,000 முதல் ரூ. 5,00,000 வரை ஊதியத்துடன் ஹூண்டாய், எல் அன்ட் டி, அசோக் லேலண்ட், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனா்.இதனிடையே வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வா் வீ.காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →