தம்மம்பட்டி, கெங்கல்லி பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.
தம்மம்பட்டி திருமண்கரடு ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். அதேபோல, தம்மம்பட்டி சிவன் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
9ஆம்பாலி முருகன் கோயில் , வாழக்கோம்பை குன்று முருகன் கோயில், செந்தாரப்பட்டி ஓணான்கரடு முருகன் கோயில், கெங்கவல்லியிலுள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.