முகப்பு
சேலம்

சேலம் - சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்

முழு பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சேலம் - சென்னை விமான சேவை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (மே 23) மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.

சேலம்

சேலம் - சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்

முழு பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சேலம் - சென்னை விமான சேவை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (மே 23) மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

முழு பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சேலம் - சென்னை விமான சேவை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (மே 23) மீண்டும் தொடங்க இருப்பதாக விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தியதால், விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மே 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சேலம் - சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், வழக்கமான நேரப்படி விமானம் இயக்கப்படும் என்றும், சேலம் விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.

சேலம் விமான நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →