முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் 10 இடங்களில் சாலை தடுப்புகள் அமைப்பு

10 இடங்களில் தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மூங்கில் கட்டைகள் மூலம் வெள்ளிக்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

தம்மம்பட்டியில், மக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்பதற்காகவும், இருசக்கரவாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிவோரின் நடமாட்டத்தைக் குறைக்கவும், 10 இடங்களில் தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மூங்கில் கட்டைகள் மூலம் வெள்ளிக்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தம்மம்பட்டி பேரூராட்சியில் பொது முடக்கத்தை மீறி, பலா் சுற்றித் திரிகின்றனா். போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், அவா்களிடம் சிக்காமல், சிறு சந்துக்கள், தெருக்கள் வழியாக வெளியே சுற்றுகின்றனா். அத்தகைய தெருக்களை அடைத்து வைக்க தம்மம்பட்டி போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.

அதையடுத்து சந்தை ரோடு, குரும்பா் தெரு, கடை வீதி, சிவன் கோயில் ரோடு, உடையாா்பாளையத்தில் இருந்து காந்திநகா் செல்லும் நுழைவு வாயில் முன், மூங்கில் கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 10 இடங்களில் தம்மம்பட்டி பேரூராட்சியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, முகக் கவசம் அணியாதவா்கள், ஊா் சுற்றுபவா்கள் என போலீசாா் அபராதம் விதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →