முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

19 மாதங்களுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
சிறுவர்களின் உடல் வெப்பநிலைகளை கண்டறியும் ஆசிரியர்கள்.
பகிர்:

19 மாதங்களுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று பரவலைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நோய் தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. 


இதனிடையே நோய்த்தொற்றின் தாக்கம் மேலும் குறையத் தொடங்கியதையடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 

இதன்படி 19 மாதங்களுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. சேலம் அழகாபுரம் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலர்கொத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →