மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119 அடியாக நீடிப்பு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 4-ஆவது நாளாக 119 அடியாக நீடிக்கிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 4-ஆவது நாளாக 119 அடியாக நீடிக்கிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 19,146 கன அடியிலிருந்து 14,812 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து நொடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 91.88 டி.எம்.சி.யாக உள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.