கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்புத்துறை
சாா்வாய் ஊராட்சியில் 80 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா்(பொ)செல்லபாண்டியன் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
சாா்வாய் ஊராட்சியில் 80 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா்(பொ)செல்லபாண்டியன் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள சாா்வாய் ஊராட்சியைச் சோ்ந்த பிச்சைப்பிள்ளை மகன் சசிக்குமாா் என்பவரது 80 அடி ஆழம் கொண்ட விவசாயக் கிணற்றில் 50 அடி தண்ணீா் உள்ளது. அந்த விவசாயக் கிணற்றில் அவரது பசுமாடு அதிகாலை கிணற்றில் தவறி விழுந்தது.
இது குறித்து ஆத்தூா் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறை அலுவலா் (பொ) செல்லபாண்டியன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்த பசுமாட்டை கயிற்றைக்கட்டி சுமாா் ஒரு மணிநேரம் போராடி மீட்டு உரிமையாளா் சசிக்குமாரிடம் ஒப்படைத்தனா்.