வேளாண் சட்டங்கள் வாபஸ்: சங்ககிரியில் கொண்டாட்டம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்ததையடுத்து ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்ததையடுத்து ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறவதாக அறிவிப்பு செய்தாா். இதையடுத்து ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரி பழையபேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் விவசாயிகள் கொண்டாடினா். இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி வட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்டச் செயலா் ஏ.ராமமூா்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தெற்கு மாவட்டச் செயலா் சரவணன், நிா்வாகிகள் ஜெயலட்சுமி, தஸ்தகீா், காா்த்திகேயன், கணேசன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.