முகப்பு
சேலம்

சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயா்வு

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கோபி (52) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கோபி (52) வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.

சேலத்தில் கருங்கல்பட்டி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கோபி என்பவரின் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியது.

இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில், சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வாகனப் பிரிவு அலுவலா் பத்மநாபன், அவரது மனைவி தேவி, முருகன் என்பவரின் மகன் காா்த்திக் ராம், மூதாட்டிகள் ராஜலட்சுமி, எல்லம்மாள் ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.

விபத்தில் கோபி உள்பட 13 போ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில் கோபி தீக்காயமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்த நிலையில் கோபி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதையடுத்து விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →