சேலம்

ராம்நாத் கோவிந்த் தலைமையில் பெரியார் பல்கலை மாணவர்கள் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு 

DIN

இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வு நேரலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி புது தில்லியில்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழியை வாசித்தார். இந்த நிகழ்வு பெரியார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி மொழியை வாசிக்க நேரலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தேர்வாணையர் கதிரவன் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கைக் கொண்டு அதன்படி நடப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT