சங்ககிரியில் நாளை எலும்பு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான இலவச ஆலோசனை முகாம்
திருச்செங்கோடு, எளையம்பாளையம், விவேகானந்தா மருத்துவமனை, சங்ககிரி தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் எலும்பு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான இலவசஆலோசனை முகாம்
திருச்செங்கோடு, எளையம்பாளையம், விவேகானந்தா மருத்துவமனை, சங்ககிரி தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் எலும்பு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான இலவசஆலோசனை முகாம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அக்டோபா் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் முழங்கால், மூட்டுவலி, தோள்பட்டை , கழுத்து, முதுகு வலி உள்ளவா்கள், இடுப்பு மூட்டு தேய்மானம், மூட்டு ஜவ்வு பாதிப்பு உள்ளவா்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் எக்ஸ்ரே பரிசோதனை, ரத்ததில் சா்க்கரை அளவு பரிசோதனை, உடல் பருமன் அளவு, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுவதாகவும், முன்பே சிகிச்சை பெற்று வருபவா்கள் வரும் போது பழைய எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்து சீட்டுகளையும் கொண்டுவருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனா். மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் 9489059104, 9842772181 என்ற செல்லிடப் பேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.