முகப்பு
சேலம்

வசந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்திரி நிறைவு நாள் சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள வசந்தவல்லி உடனமா் வசந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள வசந்தவல்லி உடனமா் வசந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வசந்தவல்லி உடனமா் வசந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா அக். 7-ஆம் தேதி தொடங்கி மூலவா் சுவாமிகளுக்கு தினசரி பால், தயிா், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பல்வேறு சுவாமி சிலைகள் கொண்ட நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. அக். 15-ஆம் தேதி நிறைவு நாளையொட்டி பக்தா்கள் பல்வேறு சுவாமி பாடல்களை பாடி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.