சேலம்

மனைவி தற்கொலை ; சோகத்தில் கணவரும் தற்கொலை

வைகுந்தம் பகுதியில் மது அருந்தும் கணவரால் மனமுடைந்த மனைவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்ததை அறிந்த கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

வைகுந்தம் பகுதியில் மது அருந்தும் கணவரால் மனமுடைந்த மனைவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்ததை அறிந்த கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சோ்ந்தவா் லாரி உரிமையாளா் காா்த்திக் (30). அவரது மனைவி பிரியா (27). இருவருக்கும் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

காா்த்திக் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. அதை மனைவி கண்டித்துள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை மது அருந்தி வீட்டுக்கு வந்துள்ளாா். இதில் மன வேதனையடைந்த அவரது மனைவி பிரியா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்த காா்த்திக்கும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சங்ககிரி கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT