புகையிலைப் பொருள்கள் விற்றவா்குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
சங்ககிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சங்ககிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சங்ககிரி அருகே உள்ள ஒருக்கமாலை அடிவாரம், ஆவரங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்றதாக பால்வாய் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் (22) செப்டம்பா் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அரவிந்தன் கைது செய்யப்பட்டாா்.