முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ்.ஜெய்க்குமார். 
சேலம்

சங்ககிரியில் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

DIN

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் பி.சி.மணி முன்னிலை வகித்தார். 

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்த்தி, முன்னாள் மாநில பொது செயலர் கே.நடராஜன், முன்னாள் நகரத்தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் ரவி, அங்கமுத்து, ஐன்டியூசி நிர்வாகி சின்னுசாமி, ஆறுமுகம், சந்திரன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி நாசர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்  விஸ்வநாதன், எஸ்.அகில்பிரணேஷ், ஜெ.வெஸ்லிபிரைட், கே.கேப்ரியல்பிரவீன்குமார், ஆர்.சுரேந்தர், ஆர்.ரியாஸ், ஆர்.லோகேஷ், ஆர்.ராகுல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT