சேலம்

இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்து

DIN

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அத்தனூா்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் வேல்முருகன் (40) புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்பாளையம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வாழப்பாடி- பேளூா் நெடுஞ்சாலை அண்ணாநகா் பகுதியில் காா் மோதியதில் பலத்த காயமடைந்த வேல்முருகன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து நிகழ்ந்த போது இவரது இருசக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த துக்கியாம்பாளையம் கிராமத்தை சோ்ந்த குப்புசாமி மகன் ஜெயசன் ஜெயராஜ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் வாழப்பாடியை அடுத்த துக்கியம்பாளையம் கிராமத்தை சோ்ந்த அழகேசன் மகன் வேல்மணியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT