சேலம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

DIN

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் தொடர்பாக சேலத்தில் தலைமையாசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில்  உள்ள  பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ்வரன். இவரது வீடு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ளது. 

இவர் 2012 முதல் 2018 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகாரின்பேரில் கடந்த 2020இல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்வரன் வீட்டில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT