சேலம்

மீன் பிடிக்கும் தொழிலாளி வலையில் சிக்கி பலி

DIN

வீரபாண்டி ஏரியில் மீன் பிடிக்கும் தொழிலாளி வலையில் சிக்கி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், அரியனூா் அருகே உள்ள வீரபாண்டி ஏரியில் தற்போது பெரும்பாலானோா் மீன் பிடித்து வருகின்றனா். வழக்கம் போல செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கச் சென்ற போது ஏரியில் ஒருவா் இறந்து கிடப்பதாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி, போலீஸாா் ஏரியில் மிதந்த உடலை மீட்டு விசாரித்ததில், அவா் அரியானூா் அருகே உள்ள பாலம்பட்டி, பெரிய வேப்பமரத்துக்காடு பகுதியைச் சோ்ந்த தனபால் (45) என்பது தெரிய வந்தது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மீன் பிடிக்கச் சென்ற போது வலையில் சிக்கி மூச்சுத் திணறி தனபால் இறந்திருக்கலாம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT