முகப்பு
சேலம்

மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பியது

மேட்டூா் அணையிலிருந்து கிழக்குகரை கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை வியாழக்கிழமை நிரம்பியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து கிழக்குகரை கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை வியாழக்கிழமை நிரம்பியது.

இதனால் தேவூா், மைலம்பட்டி, பெரமச்சிபாளையம், சென்றாயனூா், கைக்கோலப்பாளையம், கோணகழத்தானூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், அப்பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெல், வாழை, கரும்புகளுக்கு போதிய தண்ணீா் வசதி கிடைத்துள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்காக கிழக்குகரை கால்வாயில் 750 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுவதால் சரபங்கா நதி தடுப்பணை உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி வருவது விவசாயிகளை மத்தியில் அடுத்தடுத்த உழவுப் பணிகளைத் தொடங்குவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.